அன்னை நடைபயிற்ற
ஆடி அசைந்த குழந்தை
அன்னையையும் ஓடவைக்கும்;
அது ஒரு புதிய ஓட்டம்!
கடைக்கண்ணால் நோக்கி
காதலி அனுப்பும் கனிந்த
புன்னகையால் கடிது வருமே
ஒரு
மின்சாரப் பாய்ச்சல்;
அது தரும்
புதிய ஓட்டம்!
கவியெழுத எண்ணும்போதெல்லாம்
கணக்கிலா சொற்கள்
வந்த வந்து கடந்து போகும்;
கச்சிதமாய் ஒரு சொல்
கனியும்போது
களி கொள்ளும் மனம்;
அது தரும் ஒரு புதிய ஓட்டம் !
நாட்டமெல்லாம் நன்றானால்
நாளும் புதிய ஓட்டம்;
வாட்டம் போக்கி வாழ்வைப்
புகழாக்கும்!