கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்:  கவிஞர் பூ.சுப்ரமணியன்

கவிதைமணி

வைகை நதிக்கரை ஓரத்தில்
வயதான மூதாட்டி
குழல் புட்டு விற்கையிலே
பிட்டுக்கு மண் சுமந்த
பெருமானின் திருவிளையாடல்
படரும் நினைவலைகளாக
என் மனதில் ஓடின !

யமுனை நதிக்கரை ஓரத்தில்
கண்ணன் வேடமிட்டு
குழலோடு சிறுவன்
கானம்பாடி வருகையிலே...

என் புல்லாங்குழல் இசை
இனியவை என்பார்கள்
உன் குரல் கேட்காதவர்கள்

அன்று
கண்ணன் ராதையிடம்
காதல்மொழி பேசியவை
என் காதில் ஒலித்தன !

பாயும் கங்கை நதிக்கரையில்
பசித்து நிற்கும் வேளையிலே
பாமரன் தேனும் தினைமாவும்
புன்னகையுடன் கொடுக்கையிலே...

பால் பழம் தேன் ராமனுக்கு
கள்ளமில்லா குகன் வழங்கியது
உள்ளத்தில் ஓடம்போல் ஓடியது !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT