கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன் 

கவிதைமணி

அலைகள் என்றுமே ஓய்வது
இல்லை நினைவலைகளும்
ஓய்வதில்லை மனிதனின்
மனதும் நிலையாக இல்லை

நதிகளில் பொங்கி வழிந்து
அலை புரள நீர் ஓடியது ஒரு
காலம் அப்போது தோன்றிய
நினைவலைகளும் பலப்பல

கவிஞனின் சிந்தனைக்கு
மருந்தாக வழிகாட்டியாக
நிழலாக ஊக்குவிக்கியாக
நதிக்கரையின் அலைகள்

தடம் புரண்ட காலம் புரியாத
புதிர், இருண்ட காலம் 
வறண்ட காலம் நீர் இல்லா
நிலையே  நதியின் கோலம்

சுயமாக நதியின் புலம்பல்
தேடல் எதிர்பார்ப்பு வலி
மாற்றம் நினைவலைகளை
அசை போடுகிறது நதிகள்

நீரோடும் அலையோடும்
மோதும் ஒலியோடும் சலசல
சிரிப்போடும் அழகோடும்
புதுமை சில்லென்று அன்று

அனல் பறக்கும் காற்றும் 
சுடும் மணலோடும் காய்ந்த
நதிகளின் கரைகள் தேடும்
இழந்த நினைவலைகளை

பசுமையை கூட்டி நீரைத் 
தேக்கி என்றும் தென்றலாய்
நதிக்கரையின் நினைவலை
சதிராட துணை இருப்போம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT