கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

மழையே மழையே
மகிழ்ந்து மகிழ்ந்து 
குழந்தைபோல் விளையாட  
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
ஏணி அமைக்க வா !

மழையே மழையே 
பகலவன் சூடு தணிய 
விண்ணில் விளையாடும் 
கருமேகமே மழைத்துளிகளை
மண்ணுக்கு மலர்போல் 
இரவில் அள்ளி வீசு !

மழையே அந்தி மழையே 
விண்ணில் சிந்து பாடி 
மண்ணில் நொந்த உயிர்கள்
மகிழ்ந்து வாழ – நீ 
மண்ணில் வந்து விளையாடு !

மழையே இரவு மழையே 
மண்ணில் நீ வீழ்ந்தால் 
மரம் செடிகொடிகள் 
மகிழ்ந்து தலையாட்டும்
விண்ணில் தோன்றும் 
முழுநிலவு மறைந்து
நின்று குடை பிடிக்கும் !

இரவில் 
பெய்யும் மழைத்துளிகள் 
ஏழையின் குடிசையில்
தலையாட்டும் மண்பானையில்
இனிய ஜலதரங்கம் 
விடிய விடிய இசைக்கும் !
 
- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT