கவிதைமணி

மீண்டும் வருவாயா..?

கவிதைமணி

கொஞ்சும் தமிழில் கவியெழவே

……………கவிதைக் காதல் தந்தாயே..!

பிஞ்சுக் குழந்தை அழும்படியே

……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?

தஞ்சம் என்றே வந்தவரைத்

……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!

நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி

……………நீண்ட நாளாய்க் காணோமே..?

.

தன்னை மறந்து பாட்டெழுத

……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!

தென்றல் கவிதைத் தினம்தினமே

……………தந்து விட்டுச் சென்றாயே..!

என்போல் பலரும் ஏங்குகின்றார்

……………எப்போ மீண்டும் வருவாயோ..?

மன்னன் மகுடம் கவிதைமணி

……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT