நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 8

சூர்யா

அருகும் சுவடும் தெரிவுஉணரோம், அன்பே
பெருகும் மிக
, இது என்? பேசீர், பருகலாம்
பண்புஉடையீர்
! பார்அளந்தீர்! பாவியேம் கண் காண்புஅரிய
நுண்புஉடையீர் நும்மை நுமக்கு
.

எம்பெருமானே, அள்ளிப் பருகுவதற்கு ஏற்ற நற்குணங்களைக் கொண்டவரே, இவ்வுலகை அளந்தவரே, எங்களைப்போன்ற பாவிகளுடைய கண்களில் தென்படாத அளவு நுட்பமானவரே,

உங்களை எங்கே நெருங்குவது, எப்படி நெருங்குவது, அதற்கான வழி என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், உங்களை நினைத்தாலே போதும், உங்களை நெருங்கிவிட்டதுபோல் மனத்தில் அன்பு மிகுதியாகப் பெருகுகிறது. அது எப்படி? சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT