நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 2

செ.குளோரியான்

வைப்பாம், மருந்தாம், அடியரை வல்வினைத்
துப்பாம் புலன்ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்,
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பால் அவன் எங்கள் ஆயர்கொழுந்தே.

எல்லாரையும்விடச் சிறந்த குணங்களைக்கொண்டவன், அனைவரையும் கடந்து சிறந்து விளங்கும் தெய்வம், எங்கள் ஆயர்கொழுந்து, எம்பெருமான், ஐம்புலன்களும் வல்வினைகளைச் செய்யத்தூண்டும் வலிமையைக் கொண்டவை, தன்னுடைய பக்தர்கள் அந்த ஐம்புலன்களின் வலையில் சிக்கிவிடாதபடி அவன் காப்பான், அவனே பக்தர்களுக்குச் செல்வம், வினைகளைப் போக்கும் மருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT