நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

செ.குளோரியான்

பாடல் - 3

மடநெஞ்சால் குறைஇல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி
விடநஞ்சு முலை சுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறை இலமே.

பூதனை என்கிற ஒரு பேய்ச்சி, மடநெஞ்சம் குறையாத தாய் வடிவம் கொண்டு வந்தாள், விஷம் தோய்த்த அவளுடைய மார்பகங்களைச் சுவைத்து அவளை வீழ்த்திய ஞானம் மிகுந்த சிறு குழந்தை, படமெடுக்கும் நாகத்தைப் படுக்கையாகக் கொண்டு, கிடந்த திருக்கோலத்தில் அருள் செய்கிறவன், பெரிய மலைகளைப் போன்ற திருத்தோள்களைக் கொண்டவன், உயர்ந்தவன், நெடுமாயன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என்னுடைய அடக்கம் என்கிற குணத்தைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்த அடக்கத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

******

பாடல் - 4

நிறையினால் குறைஇல்லா நெடும் பணைத்தோள்
                                                                                 மடப்பின்னை
பொறையினால் முலை அணைவான், பொரு விடை
                                                                                ஏழ் அடர்த்து,
உகந்த கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின்
                                                                                கழிகோல் கைச்
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறை இலமே.

பெண்மைக்குணம் நிறைந்தவள், நீண்ட, மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவள், மடப்பக்குணம் நிறைந்த நப்பின்னை, அவளுடைய மார்பகங்களை அணைப்பதற்காக, போர் செய்யும் ஏழு எருதுகளுடன் பொறுமையாகப் போரிட்டு வென்றான் எம்பெருமான், பின்னர் மகிழ்வோடு அவளை அணைத்தான், அப்பெருமான் ஆயனாகப் பிறந்து மாடுகளை மேய்க்கச் சென்றபோது, சாயம் பூசப்பட்ட, கறை படிந்த ஆடையை அணிந்திருந்தான், கையில் ‘கடையா’ என்கிற மூங்கில் கோலும், வீசுகின்ற கோலும் வைத்திருந்தான், சறைகைமணி என்ற மணியை அணிந்திருந்தான், அத்தகைய பெருமான், என்னுடைய தளிர் நிறத்தைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்தத் தளிர் நிறத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT