நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

நாவிலிருந்து பிறக்கும்

செ.குளோரியான்

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ,
என்நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளன்ஆகவே.

நான் இதைச் சொன்னால் விரோதம்தான் வரும். ஆனாலும் சொல்கிறேன், கேளுங்கள். ‘தென்னா தென்னா’ என்று வண்டுகள் ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் என் யானை, என் அப்பன், எம்பெருமான், அப்பெருமான் இருக்கும்போது, நான் இன்னொருவரைப் பாடமாட்டேன், என் நாவிலிருந்து பிறக்கும் இனிய கவிகளை இன்னொருவருக்குக் கொடுக்கமாட்டேன்.

***

பாடல் - 2

உளன்ஆகவே எண்ணித் தன்னை, ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடி என்?
குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன்ஆய எந்தையை, எந்தை பெம்மானை ஒழியவே?

குளங்களும் கழனிகளும் சூழ்ந்த திருக்குறுங்குடியிலே சிறந்த குணங்களுடன் எழுந்தருளியிருக்கும் கண்ணன், நம் தந்தை, நம் குலத்தின் தலைவன், எம்பெருமான், அவனைத் தவிர இன்னொருவரை ஏன் பாட வேண்டும்? தன்னை ஒரு பெரிய மனிதனாகக் கருதிக்கொண்டு, தன்னுடைய செல்வத்தையே வளமாக மதிக்கும் இந்த மானிடர்களைப் பாடி என்ன பயன்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT