நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
                                 வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும்
                                ஓர் பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.

கண்ணன் அன்று வெண்ணெயைக் களவாடினான், அதனால், ஆய்ச்சியாகிய அவனுடைய அன்னை கோபம்கொள்ள, அவன் அழுதான், அத்தகைய கூத்தினை நிகழ்த்துகிற அப்பனை, குருகூர்ச் சடகோபன் ஆயிரம் தமிழ்ப்பாடல்களால் போற்றிப் பாமாலை சூட்டினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் இசையோடு நாவால் விருப்பத்துடன் உரைப்பவர்களுக்குக் கடவுள் அனுபவத்தில் வறுமை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT