நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

செ.குளோரியான்

பாடல் - 3

நிறம் கரியானுக்கு, நீடு உலகு உண்ட
திறள்கிளர் வாய்ச் சிறு கள்வன் அவற்கு,
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே.

கருநிறத்தவன், பெரிய உலகையே உண்ணுமளவு திறன்கொண்ட, சிறந்த திருவாயைக்கொண்ட சிறு கள்வன், சுழலுகின்ற சக்கரத்தைக்கொண்ட திருக்கையையுடையவன், அத்தகைய பெருமானை எண்ணி, நீண்ட கூந்தலையுடைய என் மகள் தன் பெருமையை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 4

பீடுஉடை நான்முகனைப் படைத்தானுக்கு,
மாடுஉடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுஉடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு என்
பாடுஉடை அல்குல் இழந்தது பண்பே.

பெருமை நிறைந்த பிரம்மனைப் படைத்தவன், செல்வம் நிறைந்த உலகத்தை அளந்த மணாளன், உலகை ஆளும் மன்னர்களான பாண்டவர்களுக்காகத் தூது சென்ற நம்பி, அத்தகைய பெருமானை எண்ணி, பரந்த அல்குலையுடைய என் மகள் தன்னுடைய இயல்புத்தன்மையை இழந்துவிட்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT