நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

உழலை என்பின் பேய்ச்சி முலை ஊடு அவளை உயிர்
                                                                                           உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச்
                                                                                          சடகோபன்
குழலின் மலியச்சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீரவல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே.

மரத்துண்டுகளைப்போன்ற எலும்புகளைக்கொண்ட பேயான பூதனையின் மார்பகத்தின்வழியே அவளுடைய உயிரை உண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளையே சரணாகக் கொண்டவர் குருகூர்ச் சடகோபன், அவர் எம்பெருமானைப்பற்றிப் புல்லாங்குழல் இசையைவிட இனிமையாக ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுவோருடைய அறியாமை தீரும், அப்படிப் பாடுகிறவர்களை, மான் போன்ற கண்களையுடைய பெண்கள் விருப்பத்துடன் பார்ப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT