நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல் 11

நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர், மக்களே.

இறைவனின் அடியவர்களுக்குத் தொண்டுசெய்யவேண்டும் என்கிற நல்ல கொள்கையைக்கொண்டவை மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களுக்குள்ளும் நிறைந்த எம்பெருமான், தாமரைக் கண்ணனை அழகிய, குளிர்ந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள் மனைவிமார்கள், குழந்தைகளுடன் சிறந்த குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT