நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 3

செ.குளோரியான்


பாடல் 3

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன், அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூ உலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே.

பிரம்மன், சிவபெருமான், மற்ற தேவர்களெல்லாம் எம்பெருமானை நாடி வந்து, ‘உங்களையன்றி எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை’ என்று அழைக்கிறார்கள், அதைக் கேட்டு அப்பெருமான் பகைவர்களை வெல்கிறான், மூன்று உலகங்களையும் காத்து அருள்கிறான். அத்தகைய பெருமானுடைய திருமோகூரை இனி நாம் நன்றாக அணுகுவோம், நம்முடைய இடர்களெல்லாம் கெடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT