நூல் அரங்கம்

திப்புவின் வாள்

வெ. ஜீவானந்தம்

திப்புவின் வாள் - பகவான் எஸ்.கித்வானி; தமிழில்: வெ.ஜீவானந்தம்; பக்.336; ரூ.265, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044-2625 1968.
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட "தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்' என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது.
நேர்மையும், இரக்க குணமும் கொண்ட திப்பு சுல்தான், நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டதையும், 1790 முதல் 1792 வரை நடந்த மூன்றாவது மைசூர் போரின்போது மராட்டியர்களின் வஞ்சகத்தால் தோல்வியைத் தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டபோது, காரன்வாலிஸ் பிரபுவுடன் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் தன்னுடைய இரு மகன்களைப் பணயமாக ஒப்படைத்த வரலாற்று நிகழ்வும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1799 மே 4-ஆம் தேதி நடந்த இறுதி யுத்தத்தின் பின்னணி, அதில் திப்புவின் நம்பிக்கைக்குரியவர்களே செய்த சதி, உண்மை விசுவாசிகள் பலரும் போரின் இறுதிமூச்சு வரை போரிட்டது குறித்த தகவல்கள் சுவைபட இந்த வரலாற்று நாவலில் இடம்பெற்றுள்ளமை, பாராட்டுக்குரியது.
வரலாற்றில் திப்பு சுல்தானுக்குரிய இடத்தை தமிழ் வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது இந்நூல். வரலாறு படைக்க விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT