நூல் அரங்கம்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

DIN

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான் - தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்; பக்.136; ரூ.100; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது.
 இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து மாண்டிசோரி கல்விமுறை முற்றிலும் மாறுபடுகிறது என்கிறது. "கல்விமுறை என்பது மனிதனின் ஆளுமையானது சுதந்திரத்தையடையச் செய்யக் கூடிய உதவி'யாகப் பார்க்கப்பட வேண்டும் என்று இந்நூல் கூறுகிறது.
 "தற்கால உலகில் மனிதன் வாழும் நிலையை அறிந்து கொண்டு உருவாக்கப்படும் பாடத்திட்டம் நமக்குத் தேவை. அது வரலாற்றினைப் பரந்ததொரு நோக்குடனும் மனித இனம் விரிவடைந்திருப்பதையும் மனதில் கொண்டுஅமைக்கப்பட வேண்டும். இந்நாளையச் சுற்றுச்சூழலுடன் ஒத்துவாழ உதவாத அறிவினால் மனிதனுக்கு என்ன பிரயோசனம்?' என்று கேட்கிறது.
 அத்தகைய பாடத்திட்டத்தின்படி, எழுத்து, பேச்சு, பழக்க,வழக்கங்களை கற்றுக் கொடுப்பது எவ்வாறு என்று இந்நூல் விளக்குகிறது. கல்விமுறை தொடர்பாகச் சிந்திக்க வைக்கிற சிறந்த நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT