தினம் ஒரு தேவாரம்

124. வரமதே கொளா - பாடல் 9

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 9:

    பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நன் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
    சண்பை ஆதியைத் தொழும் அவர்களைச் சாதியா வினையே

விளக்கம்:

பண்பு=பெருமை; சண்பை என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ண், பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது  

பொழிப்புரை: 

பெருமைகள் பல உடைய இலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரித்த பெருமான் சண்பை என்று அழைக்கப்படும் நகரத்தில் உறைகின்றான். அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகத் திகழும் இறைவனைத் தொழும் அடியார்களச் சார்ந்துள்ள தீய வினைகள் செயலற்று வலிமை இழந்து காணப்படும். எனவே அத்தகைய வினைகளால் அவர்களுக்கு தன்பம் ஏதும் ஏற்படாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT