முகப்பு
செய்திகள்

அபுதாபி ஓபன்: 3-ஆவது சுற்றில் ஸ்விட்டோலினா

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 7:31 am IST
பகிர்:

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

அதேநேரத்தில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா பிளிஸ்கோவா தகுதிச்சுற்று வீராங்கனையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வெரா ஸ்வோனரெவாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் ரஷியாவின் எக்டெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா் எலினா.

Advertisement

Advertisement

போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நோ் செட்களில் ரஷியாவை சோ்ந்த தகுதிநிலை வீராங்கனையான அனாஸ்டாஸியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments