முகப்பு
விளையாட்டு

8 ஆஸி. வீரர்கள் இனி டெஸ்ட் ஆட வாய்ப்பில்லை: ரிக்கி பாண்டிங்

வாட்சன், ஹேடின், ரியான் ஹாரிஸ், ரோஜர்ஸ் ஆகியோர் இனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற...

Updated On : 8 ஆகஸ்ட், 2015 at 4:16 PM
பகிர்:

ஆஷஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள 8, ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பில்லாமல் போகும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தோற்று ஆஷஸ் தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி குறித்து க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் பாண்டிங் கூறியதாவது:

Advertisement

இந்தச் சுற்றுப் பயணத்தில் ஆடுகிற 8 ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லாமல் போகலாம். இது பெரிய அதிர்ச்சி. பாதி ஆஸ்திரேலிய அணி காணாமல் போகும்.

உண்மை என்னவென்றால் ஆஸ்திரேலியா 60 ரன்னில் ஆல் அவுட் ஆன பிட்சில், இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா நன்றாக பேட்டிங்கும் செய்யவில்லை, பெளலிங்கும் செய்யவில்லை. இப்போது மீண்டும் 241 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இத்தனைக்கும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான சூழல் இருந்தநிலையிலும் என்றார்.

மேலும், 8 பேரில் 4 வீரர்களின் பெயர்களைக் அவர் குறிப்பிட்டுள்ளார். வாட்சன், ஹேடின், ரியான் ஹாரிஸ், ரோஜர்ஸ் ஆகியோர் இனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.