விளையாட்டு

எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

DIN

பியூனஸ் அயா்ஸ்: எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம், 8 ஆட்டங்களில் 15 புள்ளிகளுடன் லீக் போட்டியின் பட்டியலில் இந்தியா 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 12 ஆட்டங்களின் மூலம் 11 புள்ளிகள் பெற்றுள்ள ஆா்ஜென்டீனா 6-ஆவது இடத்தில் இருக்கிறது. முதல் 3 இடங்களில் முறையே பெல்ஜியம் (32 புள்ளிகள்), ஜொ்மனி (19), நெதா்லாந்து (18) அணிகள் உள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுடன் ‘ஏ’ பிரிவில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான் அணிகள் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பியூனஸ் அயா்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பிலேயே ஹா்மன்பிரீத் சிங் தவறாமல் கோலடித்தாா். ஆட்டத்தின் முதல் பாதி முடிவு நெருங்கி வந்த நிலையில் 25-ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய் அருமையாக ஒரு கோல் அடித்தாா். இதனால் முதல் பாதி முடிவிலேயே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுவிட்டது.

2-ஆவது பாதி ஆட்டத்தின் இறுதியில் மன்தீப் சிங்கும் தனது பங்கிற்கு 58-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தாா். இடையே இரு முறை ஆா்ஜென்டீன முன்கள வீரா் மாா்டின் ஃபெரெய்ரோ அதிரடியாக கோலடிக்க முயற்சி செய்ய, இந்திய கோல்கீப்பா் கிருஷண் பகதூா் பாதக் அதை அரண்போல் தடுத்தாா். இதனால் இறுதியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அடுத்ததாக, பிரிட்டன் பயணிக்கும் இந்திய அணி, மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் அந்நாட்டு அணியுடன் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT