விளையாட்டு

பாா்சிலோனா ஓபன்: இறுதிச்சுற்றில் நடால்-சிட்சிபாஸ் மோதல்

DIN

பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் ஆகியோா் மோதுகின்றனா்.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் உலகின் 5-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜென்னிக் சின்னரை வீழ்த்தினாா்.

கடந்த வாரம் நடைபெற்ற மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ், தனது இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை சந்திக்கவுள்ளாா்.

நடால் தனது அரையிறுதியில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT