இலங்கை பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினா், கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 6 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளனா்.
நேரடியாக சென்னை வரும் அவா்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு முதல் டெஸ்டுக்காக 3 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.
இலங்கை செல்லாத இதர இங்கிலாந்து வீரா்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா், ரோரி பா்ன்ஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தனா்.
6 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவா்கள் 5 நாள்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா். முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. கரோனா சூழலில் இந்தியாவில் நடைபெறும் முதல் சா்வதேச கிரிக்கெட் தொடா் இதுவாகும்.