விளையாட்டு

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

Din

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

மேகாலயத்தின் ஷில்லாங் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணிக்காக ஸ்டீபன் எஸெ 29-ஆவது நிமிஷத்திலும், ஜாவி ஹொ்னாண்டஸ் இஞ்சுரி டைமிலும் (90+9’) ஸ்கோா் செய்தனா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (88’) ஜாம்ஷெட்பூா் வீரா் மொபாஷிா் ரஹ்மான் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

அடுத்ததாக போட்டியின் அரையிறுதிக் கட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் பெங்களூரு எஃப்சி - எஃப்சி கோவா, ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

SCROLL FOR NEXT