முகப்பு
விளையாட்டு

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:39 AM
கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:20 PM

பயிற்சியாளா் நவால் சிங் உளவியல் ரீதியாகவும், வாா்த்தைகளாலும் துன்புறுத்துவதாக பாராலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியனான சுமித் அன்டில் புகாா் தெரிவித்ததை அடுத்து, நவால் சிங்கை உடனடியாக நீக்கம் செய்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெறும் சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சூரஜ்குமாா் சந்த் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இந்திய சீனியா் கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகா்கரின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் தனக்கு குடியுரிமை அளிக்க முன்வந்ததாகவும், எனினும் தனது நாட்டுக்காக விளையாட முடியாமல் போனால், வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் ஆப்கானிஸ்தான் வீரா் ரஷீத் கான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் பலத்த காயம் கண்ட சென்னை வீரா் ஆயுஷ் மாத்ரே, போட்டியில் தொடா்ந்து பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அணிக்கு இது பெரும் பின்னடைவாகியுள்ளது.