முகப்பு
விளையாட்டு

சென்னையை வென்றது மோகன் பகான்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:13 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:40 PM

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக ஜேமி மெக்லாரென் (45+4’) கோல் கணக்கைத் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

சென்னையின் கோல் முயற்சிகள் தகுந்த பலன் அளிக்காத நிலையில், மோகன் பகானுக்காக டிமிட்ரி பெட்ரேடோஸ் 65-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

Advertisement

எஞ்சிய நேரத்தில் சென்னைக்கு கோல் வாய்ப்புகள் கை கூடாமல் போக, இறுதியில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுமே இதுவரை தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மோகன் பகான் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை 2 தோல்விகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.