ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சீனாவின் வாங்-சன்னை எதிர்கொண்டார்கள் இந்தியாவின் ஷரத் கமலும் மனிகா பத்ராவும். இந்திய இணைக்குக் கடும் நெருக்கடியை அளித்த சீன இணை, 11-9, 11-5, 11-13, 11-4, 11-8 என்கிற செட் கணக்கில் அரையிறுதிச் சுற்றை வென்றார்கள். இதனால் இந்திய இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.