ஆசியப் போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்த இந்தியக் குத்துச்சண்டை வீரர்
இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 49 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவின் காலிறுதிச் சுற்றில் வட கொரியாவின் கிம் ஜங்க் ரயோங்கை எதிர்கொண்டார் அமித். மிகவும் பிரமாதமாக விளையாடிய அமித் 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வடகொரிய வீரரைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.