உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 241 ரன்கள் எடுத்துள்ளது. 242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டங்கள் வரலாற்றில் முதலில் பேட் செய்து 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்தது 4 முறை.
இதில், 1983-இல் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் எதிரணியை வெற்றி இலக்கை அடையச் செய்யாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்த மற்ற மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளன.
எனவே, இந்த முறை கேன் வில்லியம்ஸன் இங்கிலாந்து அணியை 241 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் 1983-இல் கபில் தேவ் வென்றதைப் போல் அதே லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வெல்லலாம். 1983-இல் கபில் தேவ் பெற்றுத் தந்த உலகக் கோப்பை தான் இந்திய அணியின் முதல் உலகக் கோப்பையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.