தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது.

DIN

பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 301 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் முறையாக...

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி நோக்கி தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஸார்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரியான் ரிக்கல்டான் (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), டேவிட் பெடிங்ஹம் (14 ரன்கள்), கைல் வெரைன் (2 ரன்கள்) எடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அய்டன் மார்க்ரம் 37 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 40 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சென் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். யான்சென் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த இணை 9-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.

விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT