முகப்பு
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியது பற்றி...

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 5:13 AM
ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) - படம் | ஐசிசி
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், இறுதி செய்யப்பட்ட அணியின் பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

இறுதி செய்யப்பட்ட இந்திய அணி

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.

பயணம் செய்யாத ரிசர்வ் வீரர்கள்

ஜெய்ஸ்வால், முகமது சீராஜ், ஷிவம் துபே. இவர்கள் மூவரும் தேவைப்படும் பட்சத்தில் துபைக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

இந்தியாவுக்கு பின்னடைவு

வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்டர்களை திணறடித்து வரும் பும்ரா, அணியில் இருந்து வெளியேறியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இருப்பினும், முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பியுள்ளது சிறிது சாதகமாக அமைந்துள்ளது. அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் வருண் சக்ரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது கூடுதல் பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments