FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ஷர்துல் விளையாடுவது பற்றி...

Updated On : 19 பிப்ரவரி 2025, 1:08 pm IST
ஷர்துல் தாகூர் - ANI
பகிர்:

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் எந்த அணியும் அடிப்படை தொகைக்குகூட எடுக்க முன்வரவில்லை.

ஆல் ரவுண்டரான ஷர்துல், இந்திய அணிக்காக 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement

Advertisement

தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கு எசெக்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

வருகின்ற ஜூன் மாதம் இங்கிலாந்து பயணிக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கவுன்டியில் தனது திறமையை நிரூபித்து, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments