கிரிக்கெட்

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி வரலாற்றில் கேரள அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. விதர்பா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும், விதர்பா அணி இந்த சீசனில் ஒரு தோல்விகூட இல்லாமல் விளையாடி வருகிறது.

கேரள அணி: அக்‌ஷய் சந்திரன், ரோஹன் குன்னும்மல், வருண் நாயனார், சச்சின் பேபி (கேப்டன்), ஜலஜ் சக்சேனா, முகமது அசாருதீன், அகமது இம்ரான், சல்மான் நிஜார், ஆதித்யா சர்வதே, எம்.டி. நிதிஷ், நெடுமன்குழி பாசில்.

விதர்பா அணி: துருவ் ஷோரே, பார்த் ரேகாடே, டேனிஷ் மாலேவார், கருண் நாயர், யாஷ் ரத்தோட், அக்‌ஷய் வட்கர் (கேப்டன்), ஹர்ஷ் துபே, நாச்சிகேத் பூடே, தர்ஷன் நல்கண்டே, யாஷ் தாக்கூர், அக்ஷய் கர்னேவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT