FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மகன் தந்தைக்காற்றும் உதவி..! தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங்கின் தந்தை தனது மகனளித்த பைக்கை ஓட்டிய விடியோ வைரலாகி வருகிறது.

Updated On : 21 ஜனவரி 2025, 5:29 pm IST
தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங் - படங்கள்: இன்ஸ்டா / சோனு லெஃப்டி.
பகிர்:

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்தார். அந்த பைக்கை அவரது தந்தை ஓட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு கவாஸ்கி நிஞ்சா எச்2ஆர் பைக்கை பரிசளித்துள்ளார். அந்த பைக்கினை ஓட்டும்போது தனது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியிலேயே அந்த பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது தெரிகிறது.

இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ. 5 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் எல்பிஜி விநியோக நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். உத்தர பிரதேசம் அலிகாரில் அலிகார் மைதானத்துக்கு அருகில் 2 அறைகொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தார். ஆரம்பகாலங்களில் சிக்கல்களை சந்தித்து வந்தார்.

ரிங்கு சிங் பிரபலமான வீரராக மாறிய பிறகும் தனது எல்பிஜி விநியோக வேலையை விடவில்லை. அனைவரிடமும் அதேமாதிரி பழகுவதாக உடன் இருப்பவர்கள் கூறியுள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்யவிருக்கிறார். இது குறித்து கான்சந்திர சிங் கூறியதாவது

ரிங்கு, பிரியா இருவருக்கும் ஒருவரையொருவர் ஒரு வருடமாக தெரியும். இருவருக்கும் இருவரையும் பிடிக்கும். ஆனால், இரு வீட்டாரின் சம்மதம் தேவைப்பட்டதால் காத்திருந்தார்கள். தற்போது இருவரும் சம்மதித்துள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.

இங்கிலாந்துடன் 5 டி20 போட்டியில் ரிங்கு சிங் விளையாடவிருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments