இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?
மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?
மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் இறுதி ஆட்டம் நவ. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வியாழக்கிழமை முன்னேறியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ. 2) இறுதி ஆட்டம் நடைபெறும் நவி மும்பையில், மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அன்றைய நாளில், மாலை 4 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறதாம்.
Advertisement
Advertisement
முன்னதாக, இதே டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான லீக் ஆட்டமொன்று மழையால் முழுமையாக தடைபட்டதும் கவனிகத்தக்கது.
ஒருவேளை மழையால் இறுதி ஆட்டம் தடைபட்டால், திங்கள்கிழமைக்கு(நவ. 3) ஒத்திவைக்கப்படலாம். ஆனால், அன்றைய நாளிலும் நவி மும்பையில் மழைக்கு 55 சதவீத வாய்ப்பிருக்கிறதாம்! ஒருவேளை இறுதி ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.
Women's ODI World Cup Final - Rain To Have Huge Say In India vs South Africa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.