டெஸ்ட்டில் அதிக 100*..! தோனி, கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!
கங்குலி, தோனி, விராட் கோலி ஆகியோரின் சாதனையை தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் சமன் செய்துள்ளதைப் பற்றி...
டெஸ்ட் கிரிக்கெட் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி ஆகியோரின் சாதனையை தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி தில்லியின் அருண் ஜேட்லி திடலில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 175 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 129 ரன்களும் குவித்தனர்.
இங்கிலாந்து தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷுப்மன் கில்லுக்கு இது 5-வது சதமாகும். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன்கள் பட்டோடி, கங்குலி, தோனி ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் 20 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி, ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் கில் சமன் செய்துள்ளார். 2017, 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி தலா 5 சதங்கள் விளாசியிருந்தார்.
அதிக சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள்
விராட் கோலி - 20 சதங்கள்
சுனில் கவாஸ்கர் - 11 சதங்கள்
முகமது அசாருதீன் - 9 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் - 7 சதங்கள்
சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி, பட்டோடி, ஷுப்மன் கில்* - 5 சதங்கள்.
ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள்
விராட் கோலி (2017) 4 சதங்கள்
விராட் கோலி (2018) - 4 சதங்கள்
ஷுப்மன் கில் (2025) - 4 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் (1997) - 4 சதங்கள்
விராட் கோலி(2016) - 4 சதங்கள்
Most Test hundreds as Indian captain: Shubman Gill goes level with Ganguly, Dhoni and Pataudi at joint-fifth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.