முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

ஒருநாள் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளதைப் பற்றி...

Updated On : 17 ஏப்ரல் 2026, 4:52 pm IST
ஆஸ்திரேலிய அணி. - படம்: ஏபி.
பகிர்:

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியினர் பாகிஸ்தான் வரவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியினர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு லாகூரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

இந்த நிலையில், மே மாதத்தின் கடைசியில் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் திடலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் மே 30 முதல் ஜூன் 5 ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி, ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்ததாலும், இளம் வீரர்கள் சரியாக விளையாடததாலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்தது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் உலகக் கோப்பைத் தொடரிலும் சோபிக்காத ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேவிடம் வீழ்ந்து லீக் சுற்றிலேயே வெளியேறியதும் நினைவுகூரத்தக்கது.

summary

The Australian cricket team is set to tour Pakistan in late May to play a three-match ODI series in Lahore and Rawalpindi, PCB sources said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments