அவமானம் - ஆட்ட நாயகி... ஒரே நாளில் மாறிய ஹர்லீன் தியோல் வாழ்க்கை!
மகளிர் பிரீமியர் லீக்கில் அசத்திய ஹர்லீன் தியோல் குறித்து...
மகளீர் பிரீமியர் லீக்கில் ஹர்லீன் தியோல் வாழ்க்கை ஒரே நாளில் மாறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மகளீர் பிரீமியர் லீக்கில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 43 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய உபி வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 162/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் ஹர்லீன் தியோல் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது (ஜன.15) வென்றார்.
இதற்கு முந்தைய போட்டியில் (ஜன.14) , குறைவான ஸ்டிரைக் ரேட் உடன் விளையாடியதால் பாதியிலேயே களத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இரண்டே நாளில் தன்னுடைய அவமானத்தை வெகுமதியாக மாற்றிய ஹர்லீன் தியோலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த சீசனில் யுபி வாரியர்ஸ் அணிக்கு இது முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்லீன் தியோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அவரது அழகுக்கான காரணம் என்னவென்று கேட்டு அவரை வெட்கப்பட வைத்த சம்பவம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Harleen Deol's life has changed in just two days in the Women's Premier League, which has attracted the attention of cricket fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.