ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டு அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்து ஏமாற்றமளித்தது. அதன் பின், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டிக்கு மழை காரணமாக முடிவு எட்டப்படாத நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்ஹமில் இன்று (ஜூலை 7) நடைபெறுகிறது.
இதுவரை இந்திய அணியை 4 போட்டிகளில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தியுள்ளார். ஆனால், அவர் இன்னும் ஒரு வெற்றியை கூடப் பெறவில்லை. இதனால், இன்றையப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரையும் சேர்த்து கடைசியாக 10 டி20 போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Expectations have arisen among fans as to whether the Indian team, led by Shreyas Iyer, will secure its first victory.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.