மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து முதல் அணியாக முன்னேறியது குறித்து...
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் பிரிவில் 4 போட்டிகளில் தோல்வியே காணாமல் முன்னேறியுள்ளது.
கடைசியாக நேற்றிரவு லார்ட்ஸ் திடலில் நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 186/7 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக, டானி வியாட்-ஹாட்ஜ் 65 ரன்கள் குவித்தார். ஹீத்தர் நைட் குறைவான பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஆஷ்மினி முனிஷீர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் 148/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
இந்த வெற்றியுடன் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பிரிவில் மே.இ.தீ. அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் அடுத்த இடங்களில் தலா 4 புள்ளிகளுடன் இருக்கின்றன. மீதமிருக்கும் ஓரிடத்துக்கு இந்த மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
England storms into Women's T20 World Cup semifinals at sweltering Lord's
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.