முகப்பு
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து முதல் அணியாக முன்னேறியது குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 4:17 pm IST
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து மகளிரணி. - படம்: எக்ஸ் /இங்கிலாந்து கிரிக்கெட்
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் பிரிவில் 4 போட்டிகளில் தோல்வியே காணாமல் முன்னேறியுள்ளது.

கடைசியாக நேற்றிரவு லார்ட்ஸ் திடலில் நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 186/7 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக, டானி வியாட்-ஹாட்ஜ் 65 ரன்கள் குவித்தார். ஹீத்தர் நைட் குறைவான பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார்.

Advertisement

Advertisement

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஆஷ்மினி முனிஷீர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் 148/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

இந்த வெற்றியுடன் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பிரிவில் மே.இ.தீ. அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து, இலங்கை அணிகள் அடுத்த இடங்களில் தலா 4 புள்ளிகளுடன் இருக்கின்றன. மீதமிருக்கும் ஓரிடத்துக்கு இந்த மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

summary

England storms into Women's T20 World Cup semifinals at sweltering Lord's

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments