மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி குறித்து...
மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.
Advertisement
Advertisement
முதல் போட்டியில் இங்கிலாந்து - இலங்கை மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 219/1 ரன்கள் குவித்தது. இதில் டானி வியாட்-ஹாட்ஜ் சதம் அடித்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃப்ரேயா கெம்ப் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சதம் அடித்த டானி வியாட்-ஹாட்ஜ் ஆட்ட நாயகி விருது வென்று அசத்தினார். குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடம் வகிக்கிறது.