முகப்பு
கிரிக்கெட்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை: பாகிஸ்தான் கேப்டன்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

Updated On : 1 மார்ச் 2026, 6:01 pm IST
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா - படம் | AP
பகிர்:

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் பல்லேகலேவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இருப்பினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியாக செயல்பட்டுள்ளது. 20 ஓவர்கள் ஆட்டத்தில் நாங்கள் 18 ஓவர்கள் நன்றாக விளையாடினோம். ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. கடந்த காலங்களைக் காட்டிலும் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டுள்ளோம். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி நன்றாக உள்ளது. ஆனால், எங்களது திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தவறுகிறோம்.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு நாங்கள் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறோம். ஏனெனில், உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்ததில் நாங்கள் சம்பந்தப்பட்டுள்ளோம். அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு நாங்களே பொறுப்பு. பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பயிற்சியாளரும் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வார் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

அழுத்தமான சூழல்களில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில், அழுத்தமான சூழலில் இருக்கும்போதுதான் தவறான முடிவுகளை எடுக்கிறோம். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதால், ஐசிசி நடத்தும் போட்டிகளில் அதிகப்படியான அழுத்தத்தில் விளையாடுகிறோம். இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமான போட்டி. ஏனெனில், ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரை விட்டு வெளியேற்றப்படும் சூழல் இருந்தது. அதனால், அழுத்தமான சூழலில் இருக்கும்போது, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுக்க நாங்கள் தவறிவிட்டோம் என்றார்.

summary

Pakistan captain Salman Ali Agha said that he did not make the right decisions under pressure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.