முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேனா? டி20 கேப்டன் சூர்யகுமார் பதில்!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியிருப்பதாவது...

Updated On : 16 மார்ச், 2026 at 12:02 PM
டெஸ்ட் சீருடையில் சூர்யகுமார் யாதவ்.
பகிர்:

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் (35 வயது) டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளில் மோசமாக விளையாடியதால் அவரால் மீண்டும் அந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் சூர்யா 18 ரன்கள் எடுத்திருந்தார்.

டெஸ்ட்டில் அதே ஆண்டு ஒரு இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்றதுக்குப் பிறகு பிடிஐக்கு அளித்த நேர்காணில் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸ் மட்டுமே. வாழ்க்கையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் கிடைக்கும். நான் சிவப்பு (டெஸ்ட் கிரிக்கெட்) பந்தில்தான் கிரிக்கெட்டையே தொடங்கினேன். 10-12 ஆண்டுகள் ரஞ்சி கோப்பையில் விளையாடி இருக்கிறேன். மும்பையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டைச் சுற்றிதான் எல்லாமே இருக்கிறது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியதும் என்னுடைய ஆர்வம் அதன்பக்கம் சென்றுவிட்டது. அப்படிதான் டி20 கிரிக்கெட் பக்கம் வந்தேன். இருந்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் எவ்வளவோ முயற்சித்தும் அதில் சரியாக விளையாட முடியவில்லை. டி20 எனக்கு ஒத்துப்போனது மாதிரி எதுவும் அமையாமல் சென்றது.

2011- 2020 வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று விதமாகவும் விளையாட வேண்டும். விக்கெட் விழுந்தால் டெஸ்ட் கிரிக்கெட் போலவும் கடைசி நேரத்தில் டி20 கிரிக்கெட் போலவும் விளையாட வேண்டும். அதனால், எனக்கு இந்த ஒருநாள் போட்டிக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் முடிந்ததை முயற்சிதும் சவாலானதாக அமைந்துவிட்டது என்றார்.

summary

Would love to play Test but T20 mein \haath set hai\, says skipper Surya.

முழு கட்டுரையைப் படிக்க →