உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விட பல மடங்கு அதிகம் பரிசுத் தொகை அளிக்கப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை குறித்து...
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விட 87 மடங்கு அதிகமானப் பரிசுத் தொகையுடன் ஃபிஃபா உலகக் கோப்பை அறிமுகமாகியிருக்கிறது.
நடப்பு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கவிருக்கிறது. மேலும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் முதல்முறையாக நடைபெறுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 கோடி) மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கால்பந்து உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 478.50 கோடி) கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிக்கே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.109.7 கோடி) வழங்கப்படும். இது ஐசிசி உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பை வெற்றியாளர் (50 மில்லியன் டாலர்), கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியாளரை (4 மில்லியன் டாலர்) விட 12.5 மடங்கு அதிகமான தொகையைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பையின் பரிசு விவரங்கள்:
சாம்பியன் - 50 மில்லியன் டாலர்
ரன்னர் அப் - 33 மில்லியன் டாலர்
மூன்றாமிடம் - 29 மில்லியன் டாலர்
நான்காமிடம் - 27 மில்லியன் டாலர்
5-8ஆவது இடம் - 19 மில்லியன் டாலர்
9-16ஆவது இடம் - 15 மில்லியன் டாலர்
17-32ஆவது இடம் - 15 மில்லியன் டாலர்
33-48ஆவது இடம் - 9 மில்லியன் டாலர்
இந்தத் தொகை இல்லாமல் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பயிற்சிக்காக ஒவ்வொரு அணிக்கும் ஃபிஃபா வழங்குவது குறிப்பிடத்தக்கது.
FIFA world cup record breaking USD 871 million, icc is only USD 10 Million
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.