முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதைப் பற்றி...

Updated On : 20 மார்ச் 2026, 12:26 pm IST
ஜாக் எட்வர்ட்ஸ்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19 - வது தொடரின் முதற்கட்ட அட்டவணை வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் போட்டி மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது.

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியைத் தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயதான ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், எட்வர்ட்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 3 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

அணியின் பிரதான கேப்டனான பாட் கம்மின்ஸ் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக, எட்வர்ட்ஸும் விலகியிருப்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எட்வர்ட்ஸ், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத ஒரே வெளிநாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Sunrisers Hyderabad player Jack Edwards has announced that he will be withdrawing from the Indian Premier League 2026 due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments