'உலகக் கோப்பை கால்பந்து 2018' 2-ஆம் நாள் லீக் ஆட்டத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கிய முதல் போட்டியில் எகிப்து, உருகுவே அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் துல்லியமாகத் தடுக்கப்பட்டன.
இந்நிலையில், போட்டியின் முடிவில் சரியாக 89-ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் ஜோஸ் மரியா ஜமினெஸ், ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.
இதனால் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. மேலும் கடந்த 1970 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தங்களின் முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள உருகுவே அணி தற்போது முதன்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.