ஐபிஎல்

171 ரன்கள்: ஐபிஎல்-லில் கடந்த மூன்று நாள்களாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் எடுத்த ஸ்கோர்!

DIN

கடந்த மூன்று நாள்களாக ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 171 என்கிற ஒரேமாதிரியான ஸ்கோரை எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளன.

கடந்த செவ்வாய் அன்று ஆமதாபாத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய தில்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேற்று தில்லியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸும் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தில்லியில் இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு அதே 171 ரன்களை எடுத்துள்ளது.

ஒரேமாதிரியான ஸ்கோரை தொடர்ச்சியாக 3 அணிகளும் எடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சயப்படுத்தியுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT