ராஜஸ்தான் வீரர் ஜெயிஸ்வால் 
ஐபிஎல்

171 ரன்கள்: ஐபிஎல்-லில் கடந்த மூன்று நாள்களாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் எடுத்த ஸ்கோர்!

கடந்த மூன்று நாள்களாக ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 171 என்கிற....

DIN

கடந்த மூன்று நாள்களாக ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 171 என்கிற ஒரேமாதிரியான ஸ்கோரை எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளன.

கடந்த செவ்வாய் அன்று ஆமதாபாத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய தில்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேற்று தில்லியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸும் மோதின. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தில்லியில் இன்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு அதே 171 ரன்களை எடுத்துள்ளது.

ஒரேமாதிரியான ஸ்கோரை தொடர்ச்சியாக 3 அணிகளும் எடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சயப்படுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

SCROLL FOR NEXT