ஐபிஎல்

ஆர்சிபி அணி புதிதாகத் தேர்வு செய்த வீரர்

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

DIN

ஆர்சிபி அணியைச் சேர்ந்த லவ்நித் சிசோடியா காயம் காரணமாக விலகியதையடுத்து புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்சிபி அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த 22 வயது லவ்நித் சிசோடியாவை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மாற்று விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிசோடியா 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக லவ்நித் சிசோடியா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ரஜத் படிதார் ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஜத் படிதார், மத்தியப் பிரதேச அணிக்காக 31 டி20 ஆட்டங்களில் விளையாடி 7 அரை சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆர்சிபி அணியில் நான்கு வருடங்கள் இடம்பெற்றுள்ளார். இப்போது ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

SCROLL FOR NEXT