ஐபிஎல்

முக்கியமான நேரத்தில் நன்றாக விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது: ஷர்துல் தாக்குர்

மும்பை : ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

DIN

மும்பை : ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

மும்பை டி ஒய் பாட்டில் ஆடுகளத்தில் தில்லி பஞ்சாப்பை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. இதில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் எடுத்த  ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

“சரியான நேரத்தில் நான் நன்றாக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் நான் நன்றாக விளையாடுவது அணிக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. 6வது ஓவரில் நான் எடுத்த 2 விக்கெட்டுகள் மூலமாக எதிரணி நிலைக்குழைந்தது. பவர் ப்ளேவில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ரன்களை லீக் செய்தாலும் பவர் ப்ளே முடிந்ததும் ரன்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஸ்பின்னர்கள் அவர்களுடைய வேலையை நன்றாக செய்தனர். 12வது ஓவருக்கு பிறகு ஈரப்பதம் காரணமாக குல்தீப்க்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் நன்றாக பயிற்சி எடுத்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரன்கள் அடிக்கப் பார்க்கிறேன். இன்னும் அதிக ரன்கள் அடிபேன் என்று நம்பிக்கையுள்ளது” என்று ஷர்துல் தாக்குர் பேட்டியளித்தார்.

பஞ்சாப்பை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி முக்கியமான நேரத்தில் வெற்றியைப் பெற்ற தில்லி அணி இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT