FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

மோசமான பந்துவீச்சு: விரக்தியில் பேசிய ஆர்சிபி கேப்டன்!

தொடர் தோல்விகளால் ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி விரக்தியில் பேசியுள்ளார்.

Updated On : 12 ஏப்ரல் 2024, 12:20 pm IST
- PTI
பகிர்:

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிலெஸ்ஸி பேசியதாவது:

Advertisement

Advertisement

டாஸ், ஈரப்பதம் போன்ற விசயங்கள் மிகவும் பாதித்தது. பவர்பிளேவில் நாங்கள் அதிகமாக தவறுகளை செய்டுவிட்டோம். ஈரப்பதம் ஒரு காரணியாக இருக்குமென தெரியும். 250க்கும் அதிகமாக அடித்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். 196 என்பது மிகவும் குறைவு என அவர்கள் காட்டிவிட்டார்கள்.

நானும் படிதாரும் ஆட்டமிழந்தபோது ரன்கள் குறைந்தது. பும்ரா மாதிரி இருவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும். அழுத்தமான நேரங்களில் சிறப்பாக பந்து வீசுகிறார். இனிமேல் நாங்கள் அதிகமாக ரன்களை அடிக்க முயற்சிக்க வேண்டும்; ஏனெனில் எங்களது பௌலர்கள் எங்களது பலமில்லை என்பது தெரியும். முதல் 4-5 ஓவர்களில் அதிகமாக ரன்களை குவிக்க வேண்டும் எனக் கூறினார்.

புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது ஆர்சிபி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments