ஐபிஎல்

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

DIN

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது.

9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கினார் ஆவேஷ் கான். ஒரு பந்து கூட விளையாடாமல் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2023இல் லக்னௌ அணியில் இது மாதிரி ஒரு முறை கடைசி பந்தில் ரன் அடிக்காமல் பைஸில் வெற்றி பெற்றார். அதன் வெற்றியை ஆக்ரோஷமான விதத்தில் ஹெல்மெட்டை கீழேப்போட்டு கொண்டாடினார். இது அப்போதே வைரலானது. தற்போது இரண்டாவது முறையாக ஒரு ரன்னும் அடிக்காமல் வெற்றிக்கு உதவியுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் அணியினர் ஆவேஷ் கானை ஃபினிஷர் என பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார்கள். லக்னௌ அணியும் பாராட்டி ஜாலியாக பதிவிட்டுள்ளது. இணையத்தில் ரசிகர்களும் ஆவேஷ் கானை புகழ்ந்து வருகிறார்கள்.

ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் பைக் அறிமுகம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

SCROLL FOR NEXT